நான் மதுரை வாசி பிறந்தது திருவள்ளூரில், பின்பு நாம் மதுரைக்கு வந்தேன். kindergarten முடித்த பின்பு நான் என்னுடைய பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். என்னுடைய அம்மாவின் சித்தப்பா அவர்கள் DEO வாக வேலை செய்து கொண்டிருந்ததால் என்னை செங்கல்பட்டில் இருக்கும் விவேகானந்தாவில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து விட்டர்கள். அன்று முதல் நான் என்னுடைய வகுப்பிலேயே சிறியவனாக சேர்த்துக்கொள்ளப்பட்டேன். முதல் வகுப்பை முடித்தபின் நான், மதுரைக்கு திரும்பிவந்தேன். நான் என்னுடைய மலரினும் இனிய TVS நகர் வாழ்கையை வாழா ஆரம்பித்தேன். எலேமேண்டரி ஸ்கூலில் நாம் இரண்டாம் வகுப்பில், திருமதி ஜானகி டீச்சர் வகுப்பில் சேர்ந்தேன். எனக்கு தெறித்த வரையில் ஜானகி டீச்சர் மிகவும் சாதுவாகவும், எதிலும் அதிகம் நாட்டம் இல்லாதவர் பூல் இருந்தார். மற்றவர்கள் அவரை பெரிதாக எடுத்க்கொள்லாத போதும் அவர் பெரிதாக அலடிகொள்ளவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக