அன்புள்ள அனைவருக்கும்
நான் நானாக முதல் முதலில் முயற்சிக்கும் எண்ணம் செயலில் மன ஓடத்தை வழி படுத்த பாய்மர சிறகு விரிக்கிறேன். எவ்வளோ நாள் ஆகிவிட்டது நான் எழுதுவதை நிறுத்தி. இன்று என் மனைவியின் தொடர் வற்புறுத்தல்களுக்கு பின் தொடங்கிவிட்டேன். நாலடிகளில் மடக்கி எழுதி அதை கவிதை என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் என் எண்ணங்களை மடக்கி எழுதுவதில் தவறு ஏதும் இருப்பதாக எனகு தோன்றவில்லை. இது பெரும்பாலும் என்னுடைய எண்ணங்களை பதிவு செய்யும் நோக்கத்தில் இருக்கும். நான் அமெரிக்கா வந்து விளையாட்டாக பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கே இதை நம்பமுடியவில்லை. இந்த காலகட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எனக்குள் மற்றும் என் பார்வையில். என் பார்வையில் ஏற்பட்ட மாறுதல்கள் என்க விசித்திரமாய் இருக்கின்றது. நான் முதன்முதலில் இந்த நாட்டிற்கு வந்த பொழுது நான் விசித்திரமாய் பார்த்த விஷயங்கள் எல்லாம் அணைக்கு சுலபமாக பழகி விட்டன. நடந்து வந்த பாதையில் இருக்கும் வழித்தடத்தில் என் காலடி தடம் - முன்புபோல் ஒத்திருக்க வில்லை